மெனிங் சந்தை இன்று காலை 10.00 மணி முதல் மூடப்படுகின்றது!

கொழும்பு மெனிங் சந்தையை இன்று (22) காலை 10 மணி முதல் மூட தீர்மானித்துள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட அறிவுறுத்தலின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.