பேலியகொட சென்றிருந்தால் தகவல்களை வழங்கவும் – கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி

Screenshot 2020 03 28 22 24 08
Screenshot 2020 03 28 22 24 08

பேலியகொட மீன் சந்தைக்கு  சென்றவர்களை பரிசோதித்த போது சுமார் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே கிண்ணியாவிலிருந்து இங்கு பயணம் செய்த  வாகன சாரதிகள், சம்மந்தப்பட்ட நபர்கள்  உடனடியாக இருப்பின் தங்கள்  தகவல்களை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அல்லது தங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகர்களிடம் அறிவித்து பதிவு செய்யுமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார். 

மேலதிக பரிசோதனைகளை மேற் கொள்ளவுள்ளோம் . உங்களின் குடும்ப உறுப்பினர்களையும், ஊர் மக்களையும் பாதுகாக்க பங்களிப்பு செய்யவும் . கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற இவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.