20 வது திருத்தத்தை ஆதரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் பலர் வாக்களித்துள்ள நிலையில், அவர்கள் மீது எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி ஒன்று கூடுகிறது.

குறித்த ஒன்று கூடல் இன்று (23) பிற்பகல் இடம்பெறுமென குறிப்பிடப்படுகிறது.

20 வது திருத்தத்திற்கு ஆதரவளித்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு இதில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.