வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைதானார்!

Ek gUQ7X0AAO0 1 1
Ek gUQ7X0AAO0 1 1

கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல் பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுகாதார தரப்பினர் மற்றும் காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் பிரதிப் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் சிகிச்சைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.