புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கைச்சாத்திட உள்ளார்!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூல வரைபில் சபாநாயகர் கைச்சாத்திட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த சட்ட மூலம் நாட்டில் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூல வரைபு நேற்றைய நாளில் நாடாளுமன்ற வாசிப்பிற்காக வைக்கப்பட்டதுடன், அதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கும் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.