திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (23.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா – வான் எல பகுதியைச் சேர்ந்த சுக்கூர் றயான் (16 வயதுடைய ) சிறுவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞர் சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ முகாமுக்கு முன்னால் போடப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.