மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு சந்திவெளியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (24) அதிகாலையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் கொண்டு சென்ற புகையிரதத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திவெளி, வைத்தியசாலை வீதி, கடற்கரை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரே (வயது 53) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கோண்டுவருகின்றனர்.