கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 30 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாககாவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த நான்காம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 924 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 104 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காவல்துறை அதிகாரப் பிரிவுகளில் கடமைக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.