பிரதேச செயலகத்தில் கால்கடுக்க நின்ற மக்கள்

dbcfe68d 5fbc 485c 9c7f 91f920d760e2
dbcfe68d 5fbc 485c 9c7f 91f920d760e2

வவுனியா பிரதேச செயலகத்தில் மக்கள் அதிகமாக வருகை தருகின்ற போதிலும் போதுமான சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படாமையினால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

2f6b5126 19d4 4b71 988c 48cca54bfc12


வவுனியா பிரதேச செயலகம் 42 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள நிலையில் மக்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்காக தினமும் வருகை தருகின்றனர்.

2f6b5126 19d4 4b71 988c 48cca54bfc12 1


இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்காக கை கழுவும் வசதி ஒன்றே அமைக்கப்பட்டுள்ளமையினால் அது அங்கு வரும் மக்களுக்கு போதுமானதாக காணப்படவில்லை.


இதனால் வீதியோரத்தில் நீண்ட வரிசையில் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


எனவே மக்களின் நலன் கருத்தி சுகாதார வழிமுறைகைளை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.