கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அங்கயன் இராமநாதன் ஆகியோரால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் பூநகரி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற பிரதி குழுக்களின் தலைவர் அங்கயன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்புாது தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது