இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மழை வேண்டி விசேட வழிபாடு

IMG 20201026 WA0029
IMG 20201026 WA0029

இன்றைய தினம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மழை வேண்டி விசேட வழிபாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. 

IMG 20201026 WA0028
IMG 20201026 WA0028

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடம் காலபோக நெற்ச்செய்கையை விவசாயிகள் ஆரம்பித்துள்ள போதும் பருவமழை இன்மையால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.குறிப்பாக மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நெல்லை விதைத்து ஒரு மாதம் கடந்துள்ளபோதும் மழையின்மையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

IMG 20201026 WA0020
IMG 20201026 WA0020

மாவட்டத்தில் இம்முறை சுமார் 72000ஏக்கர் வரை விவசாயிகள் நெற்ச்செய்கையை மேற்கொண்டுள்ளனர்.அதிகளவு விவசாயிகள் மழையை நம்பியே காலபோகத்தை மேற்கொள்ளுகின்றனர்.மழையின்மையால் மாவட்டத்தின் பெருமளவு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இன்றைய தினம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்பாளுக்கு இருநூறுக்கு மேற்பட்ட இளநீர் கொண்டு அபிசேகம் மேற்கொண்டனர்

IMG 20201026 WA0026
IMG 20201026 WA0026