வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கு.திலீபனால் இன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்ப்பட்டது.
‘ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி’ என்னும் கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும்; வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் செயற்த்திட்டத்தின் முதற்க்கட்டமாக இன்றைய தினம் 38 பேருக்கான நியமனக்கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கட்சியின் முக்யஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.