கொழும்பின் சில பகுதிகளில் இன்று தொற்று நீக்கம்!

person wearing hazmat suit disinfecting a door
person wearing hazmat suit disinfecting a door

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பின் சில பகுதிகள் இன்று தொற்றுநீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கொழும்பு மெனிங் சந்தை, பெஸ்டியன் மாவத்தை, தனியார் பேருந்து நிலையம் மற்றும் அரச பேருந்து நிலையம் ஆகியன தொற்றுநீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

காவல்துறையினருடன் இணைந்து கொழும்பு மாநகர சபை ஆகியன இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.