களுத்துறை பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர் வலயத்திற்குபட்ட ஐந்து வைத்தியசாலைகள், கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, பண்டாரகம, இங்கிரிய, பிம்புர, மத்துகம மற்றும் இத்தெபான ஆகிய வைத்தியசாலைகளே இவ்வாறு, சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக களுத்தறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள், களுத்தறை பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர், வைத்தியர் உதய ரத்னாயக்கவின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், குறித்த வைத்தியசாலைகளில் 240 நோயாளர்களுக்கான படுக்கைகள் மற்றும் ஏனைய வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, களுத்தறை மாவட்டத்திற்குட்பட்ட இங்கிரிய வைத்தியசாலையில் 33 பேரும், பிம்புர வைத்தியசாலையில் 60 பேரும் இதுவரை சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.