20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 600 மில்லியன் ரூபாவை கோரிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு நேரந்த கதி!

110970961 slpariment
110970961 slpariment

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த 20ஆவது திருத்தத்திற்கு எதிராகவே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிக்க இருந்தார்.

எனினும் அமைச்சர்கள் இருவர் அவருடன் ஆதரவாக வாககளிக்குமாறு சமரச பேச்சு நடத்தியபோது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் 600 மில்லியன் ரூபாவை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் வாக்களித்த பின் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் உறுப்பினர்களுக்கு பரீட்சயமான கழிவறை ஒன்றுக்கு வருமாறு அவரை அந்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

குறித்த எம்.பியும் ஆதரவாக வாக்களித்துவிட்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் சமரசம் பேசிய அமைச்சர்கள் அந்த இடத்திற்கு வரவில்லை. இன்று வரை அந்த கொடுப்பனவு பற்றி குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்த அமைச்சர்களிடம் நினைவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.