சிலியின் அரசியலமைப்பு மாற்றத்திற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு!

images 3 4
images 3 4

சிலியின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவாக அந்த நாட்டு மக்கள் வாக்களித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த சர்வஜன வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில், 75 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

இதுவரை 98 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 75 வீதமான சிலி பிரஜைகள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அத்துடன், சர்வஜன வாக்கெடுப்பு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக சிலி நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாகவும், சிலி நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.