அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
அமெரிக்க ராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க உயர் அரச அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தப்பமாகவும் அமைந்துள்ளது.