பிரதி காவல்துறை மா அதிபர் விடுக்கும் அவசர வேண்டுகோள் !

ajith2
ajith2

பொதுமக்கள் பஸ் பயணங்களின் போது தாம் பயணம் செய்யும் பேருந்தின் இலக்கத்தகடு) எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுமாறு காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோகண கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு பேருந்து பயணி கொவிட்- 19 தொற்று சோதனைக்காளாகி இருப்பின் குறித்த பேருந்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பதை அறிய இந்த விபரங்கள் பயன்படும் என அவர் வலியுறுத்தினார்.

பேருந்து உரிமையாளர்கள்பேருந்தின் இலக்கத்தகடு எண்ணை பஸ்ஸில் காட்சிப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.