வவுனியாவில் சித்திரதேருக்கு அச்சுக் கோர்க்கும் வைபவம் ஆரம்பம்!

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ தித்திவிநாயகர் ஆலயத்தின் சித்திரதேருக்கான அச்சுக்கோர்க்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (28) காலை 9.15 இருந்து 10.30 வரையான சுபமுகூர்த்த வேளையில் விநாயகப் பெருமானுக்கு விஷேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, தேர் அச்சு பூஜிக்கப்பட்டு குறித்த சுபவேளையில் சித்திரத்தேருக்கான அச்சு கோர்க்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இச் சித்திரத்தேர் காமதேனு சிற்பாலயத்தினால் உருவாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.