மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 33 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய ஒருவருக்கு முன்னதாக தொற்றுறுதியானது.

இந்தநிலையில், அவருடன் தொடர்புடைய ஒருவருக்கு வாழைச்சேனை – கோரளைப்பற்று மத்திய பகுதியில் இன்றைய தினம் தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.

மற்றைய நபர் கொழும்பில் இருந்து நோய் அறிகுறிகளுடன் பட்டிப்பளைக்கு சென்றிருந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்