இந்த நாட்டில் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய சஹ்ரான் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எந்தவொரு அரசியல்வாதியினதும் ஆதரவை நாம் எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திபில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
எமது வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொள்ள அவர்கள் தயாராகியுள்ளனர். முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் ஊடாக, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தாபய ராஜபக்ஸவிற்கு வழங்க வேண்டும் என எவ்வாறேனும் அவர்களுக்கு கூற வைக்க வேண்டும்.
இந்த நாட்டில் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய சஹ்ரான் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எந்தவொரு அரசியல்வாதியினதும் ஆதரவை நாம் எதிர்பார்க்கவில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.