தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 259 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், 178 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் 117 காவல்துறை பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..