82 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

IMG 20201030 WA0054
IMG 20201030 WA0054

காரைநகர் தோப்புக்காடு பகுதியில் 82 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் ​மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடிக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை தேடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, கைப்பற்றப்பட்ட கஞ்சாவை காவல்து​றை நிலையத்துக்கு எடுத்து வராமல் கடற்படையினரின் உதவியுடன் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.