கொழும்பு கரையோர காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கரையோர காவல் நிலையத்தின் 15 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தையிலிருந்தே, குறித்த காவல் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 83 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய உத்தியோகத்தர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மூடப்பட்டுள்ள கரையோர காவல் நிலையத்தின் அலுவல்கள், கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது