ஹம்பாந்தோட்டை – வீரக்கெட்டிய பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீரக்கெட்டிய மொரயாய பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைகளுக்காக தங்கல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மொரயாய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தங்கல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வீரக்கெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.