மகிழூர்தி மோதி பெண் ஒருவர் பலி!

death
death

இபலோகம-கோனபதிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அதிக வேகத்துடன் பயணித்த மகிழூர்தி ஒன்று வேக்கட்டுப்பாட்டை இழந்து பெண்ணொருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிழந்த பெண் 76 வயதுடைய சேனபுர-நாரங்கல்லேகம பகுதியைச் சேர்ந்தவராவார்.

விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து குறித்த மகிழூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவர் கெகிராவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.