பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு இராணுவத்தளபதியின் வேண்டுகோள்!

பி.சி.ஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்திய போதிலும் இன்னமும் முடிவுகள் வராதவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

பி.சி.ஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்திய பலர் முடிவுகள் வராத நிலையில் பல இடங்களுக்கு சென்றுள்ளதை அவதானித்துள்ளோம். இது ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் நோயாளியாகயிருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்திருக்கலாம் என்ற காரணத்திற்காகவே உங்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். உங்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.