இந்தியர்கள் 04 பேர் உட்பட 6 பேர் கைது!

22 1
22 1

சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சிசெய்த 6 சந்தேக நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

11 1

யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடைப்பட்ட குதிரைமலை பகுதியில் வைத்து இந்திய டவ் படகு மூலமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சள் கட்டிகளை டிங்கிப் படகில் ஏற்றிக்கொண்டிருந்த போது இவர்கள் கைதாகியுள்ளனர் என கடற்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இலங்கைப் பிரஜைகள் இருவரும், இந்தியப் பிரஜைகள் நால்வரும் உள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் கல்பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் பெருந்தொகையாக மஞ்சள் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காவற்தறையினர் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.