மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான வேலைத்திடட்டத்தின் கீழ், தனியார் பஸ் சேவைகளும் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்..