12 வயதுடைய மாணவிக்கு கொரோனா!

202006270951055479 In Madurai Corona Ward 5 more people died and 194 people SECVPF
202006270951055479 In Madurai Corona Ward 5 more people died and 194 people SECVPF

மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (10) அடையாளம் காணப்பட்டார் என்று சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இதில் குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

சிறுமியின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 5 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கொழும்பில் தொழில் செய்து வந்த குறித்த மாணவியின் தந்தை அண்மையில் வீட்டுக்குவந்திருந்த வேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.