கம்பஹா மாநகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

opoyi in6u1 Ht
opoyi in6u1 Ht

கம்பஹா மாநகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில தினங்களாக பிரதேசங்களில் சிலவற்றில் அமைந்துள்ள விகாரைகளில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் 5 ஆயிரம் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகிய மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 க்கும் அதிகமானோர் நாளைய தினம் (12) பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.