பனிக்கன்குளத்தில் பெக்கோ – கன்டேனர் பாரவூர்தி விபத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் 232 ஆவது கிலோமீற்றருக்கும், 233 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து நேற்று (11) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாருக்கும் உயிர் சேதங்கள் இடம்பெறவில்லை.

இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நோக்கி பெக்கோ இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் ஒன்று அதன் சில்லு காற்று போன காரணத்தினால் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியாவை நோக்கி வருகைதந்த இன்னுமொரு கன்டேனர் பாரவூர்தி குறித்த வாகனத்தில் மோதுண்டு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனங்கள் கடுமையாக மோதுண்டு சேதமடைந்துள்ளபோதும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.