நாளையுடன் நிறைவடைகின்ற அரவிந்த் குமாருக்கு வழங்கிய கால அவகாசம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 39
625.500.560.350.160.300.053.800.900.160.90 39

அரசாங்கத்தின் 20ஆம் திருத்த சட்டமூல வரைபுக்கு ஆதரவளித்தமை தொடர்பில் விளக்கம் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமாருக்கு மலையக மக்கள் முன்னணி வழங்கிய கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த் குமாருக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

கடந்த 25 ஆம் திகதி ஹட்டனில் கூடிய மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழு கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் அவர் தமது விளக்கத்தை இதுவரையில் வழங்கவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அவரது விளக்கம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மத்திய செயற்குழு கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.