கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் உண்மைக்கும் புறம்பானது என காவல்துறை ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில், இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.