எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தொடர்பான பதிவுகளை தமக்கு சமர்ப்பிக்குமாறும் வட மாகாண கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.
இந்தநிலையில், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் தொடர்பான இருநாடுகளுக்கும் இடையிலான அமைச்சு மட்டக் கலந்துரையால் விரைவில் நடைபெறவுள்ளது.
இதன்போது, இந்திய மீனவர்களது எல்லைமீறல் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை முன்வைத்து கலந்துரையாடுவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.