கோட்டாவைக் கொலைசெய்ய சூழ்ச்சி செய்தார் ஜோன்ஸ்டன்: சபையில் போட்டுடைத்தார் ராஜித

images 10
images 10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காகத் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரைக் கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று  உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்த விவாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது.

இந்த விவாதத்துக்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்க்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது.

இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டபோதே ராஜித எம்.பி. மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.