போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

download 3 7
download 3 7

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களுக்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக 1927 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறித்த கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களும் இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணின் ஊடாக 24 மணித்தியாலங்களும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளின் ஊடாக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.