யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசனின் தீபாவளி வாழ்த்துச்செய்தி!

தீபாவளி பண்டிகையின்போது கொண்டாட்டங்களைத் தவிர்த்து தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைவரும் கொடிய அரக்கன் கொரோனா இவ்வுலகை விட்டு நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம் என யழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள க.மகேசன் இன்றைய இந்நாளிலே துன்பங்கள் நீங்கி நல்வாழ்வை வேண்டி வீட்டிலிருந்து தங்கள் குலதெய்வங்களை பிராத்திப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.