அனுராதபுர புனித பூமிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி ஸ்தூபியை வழிபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நேற்று பிற்பகல் அனுராதபுரத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்குள்ள பல்வேறு புனித பூமிகளுக்குச் சென்றதோடு மத வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் ருவன்வெலி வளாகத்தில் அமைந்துள்ள துட்டைகைமுனு மன்னனின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மலர் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்துக்கொண்டிருந்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.