இரட்டைக் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது!

இரட்டைக் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

குடும்பங்களுக்கு இடையே நீண்ட காலம் நீடித்த பகை நேற்று (13) வாள்வெட்டு மோதலாக மாறி இரட்டைக் கொலையில் முடிந்தது.

சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்தனர்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் உறவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டது. அதனால் பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் சம்பவ இடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.