நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு 40 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

வவுனியா மாவட்டச்செயலகத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் நாற்பதாயிரம் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு முஸ்லீம் அலுவல்கள் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடு பூராகவும் 10 இலட்சம் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இச்செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக இன்று (14) வவுனியா மாவட்ட செயலகத்தில் நாற்பதாயிரம் மரக்கன்றுகளை வவுனியா மாவட்டத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் கு.சபர்ஜா ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது