போகம்பரை சிறைச்சாலையில் மேலும் 80 பேருக்கு கொரோனா!

கண்டி போகம்பரை சிறைச்சாலையில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போகம்பரை சிறைச்சாலை பழைய கட்டடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 14 பெண் கைதிகள் உட்பட குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மேலும் சில கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.