வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்றுமுன்தினம் இரவு கூமாங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன் விரோதம் காரணமாக குறித்த தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் வவுனியா குற்றத்தடுப்பு க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.