கொழும்பு நகரத்தின் எந்த தரையிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கலாநிதி ஹேமந்த ஹேரத்
கலாநிதி ஹேமந்த ஹேரத்

கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் எந்த தரையிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள வைத்தியர் ஹேமந்த ஹேரத் பேலியகொட மீன்சந்தையிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் மீனை உண்ணுவது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர் எனினும் நன்கு சமைத்த மீனை உண்ணுவது குறித்து மக்கள் அச்சமடையதேவையில்லை என தெரிவித்துள்ளார்.

எனினும் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் வைரஸ் எந்த தரையிலும் காணப்படலாம் என தெரிவித்துள்ள அவர் வைரஸ் மீனிலும் பொருட்களிலும் காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்களை தொட்ட பின்னர் கைகளை கழுவுவதன் மூலம் கைகளை முறையான விதத்தில் கழுவுவதன் மூலமும் வைரஸ் பரவலை தடுக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.