சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற தவறிய 27 பேர் கைது!

04 1
04 1

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை  பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து இது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 290  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.