யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 83 பேர் பாதிப்பு!

20200519 145120 mfnr 1
20200519 145120 mfnr 1

கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

குறித்த அனர்த்தத்தில் 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய்,கரவெட்டி போன்ற பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.