அதி அவதான நிலையை அடைந்துள்ள கொழும்பு நகர சபை எல்லை!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF

கொழும்பு நகர சபை எல்லை கொரோனா அதி அவதான நிலையை அடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின், பிரதான தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய நிலையில் நாம் ஓரளவிற்கு நிலைமையை கட்டுப்படுத்தியிருந்தாலும் கொழும்பு மாநகர சபை எல்லை, அதையும் மீறி சென்று மேல் மாகாணமும் ஏதோ ஒரு வகையில் அதி அவதான நிலையில் காணப்படுகின்றது. சமூகத்தினுள் தொற்றாளர்கள் பதிவாகும் அதேவேளை, பல்வேறுபட்ட நிறுவனங்களிலும் தொற்றாளர்கள் பதிவாகின்ற காரணத்தால் எவ்வாறாவது இந்த நிலைமை கட்டுப்படுத்த வேண்டி அதிக அவதானத்தை செலுத்த வேண்டிய இடமாக மாறியுள்ளது.