வரவு-செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா சம்பளமானது அடிப்படை சம்பளமாக காணப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.