அன்புவெளிபுரம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

investigation
investigation

திருகோணமலை – உப்புவெளி – அன்புவெளிபுரம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் 39 வயதான இளைஞர் ஒருவரும், 69 வயதான பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் நின்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரை தாக்கியவர்களை கண்டித்தமைக்காக, 39 வயதான குறித்த சிறுவனின் உறவினர் ஒருவரை அவரது வீட்டுக்குள் பிரவேசித்த இளைஞர்கள் குழு ஒன்று தாக்கி காயப்படுத்தியுள்ளது.

இதன்போது அங்கிருந்த பெண்களால் அந்தகுழுவினர் தாக்கி விரட்டியடிக்கப்படும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக எமது செய்தி சேவை திருகோணமலை காவற்துறையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றமையை உறுதிப்படுத்திய காவற்துறையினர், அதுகுறித்து உப்புவெளி காவற்துறையினரால் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.