போலிச் செய்திகளை தெரிவிப்பது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் வேலை-அஜித் ரோஹண

ரோஹன
ரோஹன

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் இறந்து கிடப்பதாக, சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்தியுடன், ஒழுங்கமைக்கப்பட்ட 31 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்று சம்பந்தப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்தச் சந்தேகநபர்கள், கடுகண்ணாவ, ஹந்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, இதில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நான்கு பேரைத் தவிர மேலும் 27 பேர் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.